Thursday, February 21, 2008

செல்வரத்தினம் சிவரஞ்சன்


01.02.2007 அன்று இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்

--------------------------------------------------------------

காற்றில் அழுகை...

எல்லோரும் சிதறிய இடத்தில்
இடிந்துபோயிருக்கிறோம்
குருதி விறைத்த
உன் சாவின் செய்தியை
வழங்கிவிட்டுப்போகிறது
நீ கலந்த காற்pறல்
எமது அழுகை.

எப்படி? ஏன்? எதற்காக?
எங்களுக்குள்
குரல் அடிபட்டுக்கிடக்கிறது.

உனக்காக கட்டப்பட்டிருந்த
ஓலைக்குடில்
கட்கெ; குறையிலிருக்கும் சுவர்கள்
எதுவரை காத்திருக்கும்
எப்போதேனும் கட்டப்படுமா?
உனது குடில் இனி
வேயப்படுமா?
அப்பா இல்லாத பிள்ளை
அவசரமாகவும்
அக்கறையாகவும் படித்தாய்
வீட்டின் ஒரேஒரு ஆண்பிள்ளை
உன் அம்மா தலையிலடித்து
அழுகிறாள்
இனி யாருமில்லை
எதுவுமில்லையெனறு.

சவத்தை கூடக்காணாமல்
உனது ஒளிப்படத்தின்முன்
உன் அம்hமவோடு
ரத்தம் துடிக்க
அழுகிறார்கள்
உன் மூன்று அக்காமார்.

சிவசங்கரைபோல
பிரதீபனைபோல
கமலதாஸைபோல
உனது சாவும்
உரிமைகோரப்படாமல்
இயற்கை என்பதாக
ஆக்கிரமிக்கப்பட்ட
நகரம் நிகழ்தித்முடித்திருக்கிறது.

இப்படி எத்தனை
வயிற்றுநெருப்புகளின்
துயரில்
துப்பாக்கியின்குறி
வெற்றி
சாவுமீதான உழைப்பு
அசுரநித்திரை சீவிக்கும்..

------------------------------------------

No comments: